News December 11, 2025

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு

image

இரணியல் அருகே ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி புஷ்பம் (61). இவர் டிச.3 அன்று கார்த்திகை விளக்கேற்றும் போது சேலையில் தீ பிடித்தது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 7, 2026

குமரி: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

image

குமரி மாவட்ட மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!

News March 7, 2026

குமரி: வீட்டின் முன் மர்மமாக இறந்து கிடந்த பெண்!

image

சூழால் பகுதியைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (53). இவர் வீட்டின் முன்பு முகத்தில் காயத்துடன் அசைவற்ற நிலையில் கிடந்தார். மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொல்லங்கோடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது அவர் சாவுக்கு என்ன காரணம் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

News March 7, 2026

குமரியில் மேலும் 6 சப் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்!

image

சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே, 21 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் குமரி மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!