News April 28, 2024

மாணவர் விசா பெற கட்டுப்பாடு

image

வெளிநாட்டினர் இந்திய திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்விப் படிப்புகளில் சேருவதற்குப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தடை விதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களில் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், தொலைதூர திட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர முடியாது.

Similar News

News August 14, 2025

தூய்மை பணியாளர்களுக்கான 6 அறிவிப்புகள்

image

*தூய்மை பணியாளர்களுக்கு நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க தனித் திட்டம். *பணியின் போது இறக்க நேரிட்டால், குடும்பத்தினருக்கு ₹10 லட்சம். *சுய தொழில் தொடங்குவோருக்கு ₹3.50 லட்சம் மானியம். கடனை தவறாமல் செலுத்தினால் 6% வட்டி மானியம். *குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும், அனைத்து கட்டணங்களும் வழங்கும் வகையில் ‘புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டம்’. *வசிப்பிடத்திலேயே சொந்த வீடு. *இலவச காலை உணவு.

News August 14, 2025

‘ஓரணியில் தமிழ்நாடு’ OTP பெற தடை நீட்டிப்பு

image

திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் OTP பெற இடைக்காலத் தடை தொடரும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், DMK தரப்பில் OTP பெறவில்லை என கூறிய நிலையில், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், OTP எண் பெறுவது சட்டவிரோதம் எனக் கூறிய கோர்ட் மத்திய, மாநில அரசுகள், DMK பொதுச்செயலாளர் பதில் அளிக்கவும் ஆணையிட்டுள்ளது.

News August 14, 2025

நாய்க்கடியால் இறக்கும் 20,000 பேர்! ரிப்போர்ட் இதோ..

image

இந்தியாவில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து WHO ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.
▶இந்தியாவில் ஆண்டுக்கு 18000-20000 பேர் ரேபிஸ் நோயால் இறக்கின்றனர். ▶இந்தியாவில் 1 நாளைக்கு 10,000-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு ஆளாகின்றனர். ▶ 2024-ல் நாடு முழுவதும் 37.2 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு. ▶2022-2024-ல் அதிக நாய் கடி சம்பவங்கள் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது(13.5 லட்சம்)

error: Content is protected !!