News December 10, 2025
கோயம்புத்தூரில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று (டிச.10) மின்னஞ்சல் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர் குழு மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டனர். எந்த வெடிகுண்டும் கண்டறியப்படவில்லை. இது 14-வது மிரட்டல் என குறிப்பிடப்படுகிறது. பின் மெயில் அனுப்பியவர் குறித்து சைபர் கிரைம் விசாரணை நடைபெறுகிறது.
Similar News
News March 6, 2026
நாம் தமிழர் கட்சியினர் கைது

கோவையில் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தை தடை செய்யக் கோரி திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறித் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளாவில் பெரும் போராட்டங்களுக்கு இடையே இப்படம் வெளியான நிலையில், கோவையில் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.
News March 5, 2026
கோவை: பசு மாடு வாங்க ரூ.1,00,000

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 5, 2026
BREAKING: சூலூர் அருகே சுட்டுப் பிடித்த போலீசார்

சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி புதூர் பகுதியில் கத்தியுடன் மிரட்டிய ரவுடி பாலமுருகன், பிடிபடும் போது உதவி ஆய்வாளர் யுவராஜைக் கத்தியால் வெட்டினார். இதைக் கண்ட ஆய்வாளர் பிரேம் ஆனந்த், தற்காப்பிற்காக ரவுடியைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


