News April 28, 2024
கடவுளுக்குத் துரோகம் செய்தவர் ராகுல்

ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழை நிராகரித்த ராகுல், ஓட்டுக்களைப் பெற அயோத்திக்கு வரவுள்ளார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார். உ.பி.,யில் பிரசாரம் செய்த அவர், “கோவில் திறப்பு விழாவுக்கு வராமல் கடவுளுக்குத் துரோகம் செய்தவர் ராகுல். அவர் மீண்டும் அமேதியில் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரசுக்கு வாக்களித்தால் உங்களின் சொத்துக்கள் பறிக்கப்படும்” எனக் கூறினார்.
Similar News
News August 14, 2025
இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்: IMD

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, தி.மலை, புதுக்கோட்டை, தஞ்சை, தென்காசி, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க!
News August 14, 2025
தூய்மை பணியாளர்களுக்கான 6 அறிவிப்புகள்

*தூய்மை பணியாளர்களுக்கு நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க தனித் திட்டம். *பணியின் போது இறக்க நேரிட்டால், குடும்பத்தினருக்கு ₹10 லட்சம். *சுய தொழில் தொடங்குவோருக்கு ₹3.50 லட்சம் மானியம். கடனை தவறாமல் செலுத்தினால் 6% வட்டி மானியம். *குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும், அனைத்து கட்டணங்களும் வழங்கும் வகையில் ‘புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டம்’. *வசிப்பிடத்திலேயே சொந்த வீடு. *இலவச காலை உணவு.
News August 14, 2025
‘ஓரணியில் தமிழ்நாடு’ OTP பெற தடை நீட்டிப்பு

திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் OTP பெற இடைக்காலத் தடை தொடரும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், DMK தரப்பில் OTP பெறவில்லை என கூறிய நிலையில், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், OTP எண் பெறுவது சட்டவிரோதம் எனக் கூறிய கோர்ட் மத்திய, மாநில அரசுகள், DMK பொதுச்செயலாளர் பதில் அளிக்கவும் ஆணையிட்டுள்ளது.