News December 10, 2025
திருப்பதியில் அடுத்த ஊழல்: Dupatta Scam!

திருப்பதியில் லட்டு கலப்படம், உண்டியல் பணம் திருட்டை தொடர்ந்து ‘துப்பட்டா ஸ்கேம்’ வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோயிலுக்கு வரும் VIP பக்தர்களுக்கு பட்டு துண்டு அணிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், இவை பட்டால் செய்யப்படாமல், Polyester-ஆல் செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2015- 2025 வரை இப்படி ஏமாற்றி, ₹54 கோடி வரை ஊழல் செய்ததாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இன்னும் திருப்பதியில் என்னென்ன ஊழலோ!
Similar News
News March 21, 2026
பொதுத்தேர்வு.. பள்ளிகளுக்கு புதிய உத்தரவு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், திங்கள் முதல் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்களை அரசு வழங்கியுள்ளது. *தேர்வர்களின் முகப்புத் தாள்கள் முதன்மை விடைத்தாள்களுடன் இணைக்கப்பட்டிருப்பதை தேர்வுக்கு முன்னரே உறுதி செய்ய வேண்டும். *சொல்வதை எழுதுபவர் நியமனங்களில் அன்றைய தேர்வு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. *அறை கண்காணிப்பாளராக 10-ம் வகுப்பு ஆசிரியர்களை நியமிக்க கூடாது.
News March 21, 2026
அதிமுக கூட்டணியை CSK உடன் ஒப்பிட்ட TTV தினகரன்

டெல்லியில் இருந்தே அதிமுக இயக்கப்படுவதாக ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், TTV புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். IPL-ல் தமிழ்நாட்டை CSK அணி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதற்கு தோனி கேப்டனாக உள்ளார். அதில் எத்தனை தமிழர்கள் உள்ளனர் என கேள்வி எழுப்பினார். முதலில் இதற்காக ஸ்டாலினை போராடச் சொல்லுங்கள் என்ற அவர், டெல்லி, தமிழ்நாடு என இனியும் பேசி மக்களை ஏமாற்ற முடியாது என்றார்.
News March 21, 2026
மரண பயத்தில் மனைவியை காதலனுடன் அனுப்பிய கணவர்

உ.பி., புலந்த்ஷரை சேர்ந்த ராஜ்குமாரின் மனைவிக்கு இன்னொருவருடன் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில், தன் மனைவியின் போனில் <<15809593>>புளூ டிரம்<<>> தொடர்பான ஸ்கிரீன் ஷார்ட்களை பார்த்த அவர், உடனே போலீஸுக்கு சென்று, ‘என் மனைவியின் போனில் இதெல்லாம் இருக்கு. அவ என்னை கொல்ல திட்டமிட்டிருக்கா… தயவுசெஞ்சு எங்கள பிரிச்சு விட்டுடுங்க…’ என கெஞ்ச, போலீஸும் பஞ்சாயத்து பேசி மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்தனராம்.


