News December 10, 2025
ராமநாதபுரம்: லஞ்சம் வாங்கிய VAO கைது!

பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் தனது பட்டா மாறுதலுக்காக வேந்தோனி கிராம VAO கருப்பசாமியை சந்தித்து பேசியுள்ளார். கருப்பசாமி தனக்கு ஆவனம் கிடைக்கவில்லை எனவும், தான் பரிந்துரை செய்வதற்காக ரூ.13,000 கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த நபர் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று ரசாயனம் தடவிய பணத்தை கருப்பசாமியிடம் கொடுக்கவே, அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
Similar News
News March 26, 2026
ராம்நாடு : இனி GOVT ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்..

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: ன்ஸ்ட்ல்
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News March 26, 2026
ராம்நாடு : மாதம் ₹1,000 வழங்கும் அசத்தல் திட்டம்

காசநோயாளிகளுக்கு மாத மாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் https://nikshay.in/Home/Index -ல் (அ) அரசு சுகாதார மையத்திலும் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். SHARE IT
News March 26, 2026
பரமக்குடி அருகே ரூ.1,55,000 பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள பார்த்திபனூர் பகுதியில் சோதனைச் சாவடி அருகில் தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழு நேற்று (மார்ச்.25) வாகன சோதனை மேற்கொண்ட போது காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.1,55,000 ஐ அந்த நபரிடமிருந்து கைப்பற்றினர். இந்த பணத்தை தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.


