News December 10, 2025

திருப்பூர்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>“நம்ம சாலை”<<>> செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

Similar News

News December 13, 2025

திருப்பூர்: டிகிரி போதும் அரசு வங்கியில் வேலை!

image

அரசு வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் துணை நிறுவனமான நைனிடால் பேங்க் லிமிடெடில் காலியாக உள்ள Customer Service Associate (CSA /Clerk) (II) உள்ளிட்ட 185 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.01ம் தேதிக்குள் <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

News December 13, 2025

திருப்பூரில் மின்தடை அறிவிப்பு!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.15) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ், ரெட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி,ஆர் பாளையம், சிறுகளஞ்சி, வரப்பாளையம், வரப்பாளையம், பாப்பம்பாளையம், செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிகவுண்டம்பாளையம், வட்டலாபதி, செரங்காடு, முத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 13, 2025

திருப்பூர் அருகே மதுவால் நேர்ந்த வினை: பறிபோன உயிர்!

image

திருப்பூர் அவிநாசி, மங்கலம் ரோடு ராயன் கோவில் காலனியில் வசிப்பவர் ராமசாமி. இவர், தனது நண்பர் ஜெகதீஷுடன், நேற்று முந்தினம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஜெகதீஷன் தள்ளிவிட்டதில் ராமசாமி கீழே விழுந்து, சுயநினைவை இழந்தார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், ராமசாமியை பரிசோதித்ததில் அவர் உயிரிழந்தது தெரிந்தது. இதனை அடுத்து ஜெகதீஷை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!