News December 10, 2025
புதுவை: குழந்தை இறப்பு-முதல்வரிடம் கோரிக்கை!

நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், அது சம்மந்தமான விரிவான மருத்துவ ஆய்வு நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ராஜவேலு, முதல்வர் ரங்கசாமியை சட்டபேரவை அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 30, 2025
புதுவை: குளத்தில் மூழ்கிய கூலித்தொழிலாளி பலி

காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(29). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் குளத்தில் மீன் பிடித்தபோது திடீரென குளத்தில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காலாப்பட்டு தீயணைப்பு வீரர்கள், ராஜாவை தேடினர். இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் ராஜாவை நேற்று மதியம் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.
News December 30, 2025
புதுவை: ஆசிரியர் தகுதி தேர்வு முடிவை சமர்பிக்க உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர், தேர்ச்சி பெறாதவர்கள்
விபரங்களை சமர்பிக்க கல்விதுறை உத்தரவு. புதுவை கல்வித்துறை
இணை இயக்குனர் வெர்பினா ஜெயராஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்ற ஆசிரியர்கள், தகுதி பெறாத ஆசிரியர்கள் விபரங்களை வரும் 31-ந் தேதி முன்பாக கூகுள் படிவம் மூலம் கல்வித்துறையில் சமர்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
News December 30, 2025
புதுவை: ஆசிரியர் தகுதி தேர்வு முடிவை சமர்பிக்க உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர், தேர்ச்சி பெறாதவர்கள்
விபரங்களை சமர்பிக்க கல்விதுறை உத்தரவு. புதுவை கல்வித்துறை
இணை இயக்குனர் வெர்பினா ஜெயராஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்ற ஆசிரியர்கள், தகுதி பெறாத ஆசிரியர்கள் விபரங்களை வரும் 31-ந் தேதி முன்பாக கூகுள் படிவம் மூலம் கல்வித்துறையில் சமர்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


