News December 10, 2025
புதுவை: விவசாய கூலி தொழிலாளி திடீர் இறப்பு

பாகூர், அரங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (63). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், அரங்கனூர் ஏறமுடி அய்யனார் கோயில் அருகே, வயலில் பூச்சி மருந்து அடித்தபோது, அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாகூர் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
புதுச்சேரி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!
News December 11, 2025
புதுச்சேரி: ஈஷா சிங்கிற்கு அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டு

புதுச்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக விஜயின் பொதுக்கூட்டம் அமைதியாக நிறைவடைந்தது. இதில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் சிறப்பாக காவல் ஏற்பாடுகளை செய்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங்கிற்கு, புதுச்சேரி மாநிலம உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
News December 11, 2025
மகாகவி பாரதியார் பிறந்தநாள் – முதல்வர் மரியாதை

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழா இன்று புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள அவர் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


