News December 10, 2025

குளித்தலையில் போலியான லாட்டரி விற்ற நபர் கைது!

image

குளித்தலை பெரியபாலம் பகுதியில் பொதுமக்களிடம் போலியான லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக, ஐநூற்றுமங்களம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து நேற்று பெரியபாலம் பகுதியில் லாட்டரி விற்ற தண்ணீர் பள்ளியை சேர்ந்த ரமேஷ் (51) என்பவர் மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் போலியான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 24, 2025

அரவக்குறிச்சியில் வசமாக சிக்கிய இருவர்!

image

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா புங்கம்பாடி பிரிவு அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற அரவக்குறிச்சி போலீசார் லாட்டரி விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (50) மற்றும் பாண்டியன் (52) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்.

News December 24, 2025

கரூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 24, 2025

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் (Assistant) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளன. இந்தநிலையில் கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி உதவியாளர் பணித் தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்கு, இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக 6383050010 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!