News April 28, 2024
ராகுல் காந்திக்கு பியூஷ் கோயல் சவால்

தைரியம் இருந்தால் வாரணாசியில் போட்டியிடுங்கள் என ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சவால் விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தி வயநாட்டிலும், அமேதியிலும் நிச்சயம் தோற்பார் என்றார். தன்னை எதிர்த்து ராகுல் வடக்கு மும்பையிலும் போட்டியிடலாம் எனக் கூறிய அவர், 4 – 5 இடங்களில் நின்றால் தற்செயலாக ஒன்றில் வெற்றி பெறலாம் எனக் கிண்டல் செய்தார்.
Similar News
News September 19, 2025
RECIPE: ஹெல்தியான பச்சை பயறு புலாவ்!

*குக்கரில் நெய் விட்டு, மிதமான தீயில் கசகசா, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைப் பட்டாணி, மசாலாப் பொருள்களை சேர்த்து வதக்கவும் *பிறகு, பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், எலுமிச்சை சாறு சேர்க்கவும் *இதில், தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து, அரிசி- பச்சைப்பயறு கலவையை சேர்த்து 3 விசில் வரை காத்திருந்தால், சுவையான பச்சைப்பயறு புலாவ் ரெடி. SHARE IT.
News September 19, 2025
நான் டிரம்பின் ஆதரவாளர் அல்ல: போப் லியோ

தான் டிரம்பின் ஆதரவாளர் அல்ல என போப் லியோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசியலில் தலையிட விரும்பவில்லை என்ற அவர், அதேநேரம் அங்கு நிலவும் புலம் பெயர்ந்தோர் பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுப்பேன் என கூறியுள்ளார். இதுவரை தான் டிரம்பிடம் பேசவில்லை என கூறிய போப், அவரின் கொள்கை முடிவுகளில் மாறுபட்ட கருத்த உள்ளதாகவும் தனது முதல் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
News September 19, 2025
USA-வில் இந்திய மாணவர் என்கவுன்டர்.. நடந்தது என்ன?

USA-வில் PG படித்து வந்த தெலங்கானாவை சேர்ந்த முகமது நிஜாமுதீன்(30) அந்நாட்டு காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். ஹாஸ்டலில் உடன் இருந்தவரை கத்தியால் குத்தியதற்காக அவரை சுட்டு கொன்றதாக போலீசார் கூறியுள்ளனர். செப்.3-ம் நடந்த இந்த சம்பவம் 2 வாரங்களுக்கு பிறகே குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இனவெறி பிரச்னையே காரணம் என மாணவனின் குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர்.