News December 9, 2025
தஞ்சாவூர்: இருசக்கர வாகன விபத்து – 2 சிறுவர்கள் பலி

தஞ்சாவூர் மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த திரிஷேக்(17) மற்றும் உதாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்(17) ஆகிய இரண்டு சிறுவர்களும்
இருசக்கர வாகனத்தில், திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து ஊருக்கு திரும்பி வருந்துள்ளனர். அப்போது திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதாகோவில் சாலை ஓரமாக இருந்த சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் பலியாகினர்.
Similar News
News December 10, 2025
தஞ்சாவூர்: போலீஸ் என கூறி ரூ.44 லட்சம் கொள்ளை

மன்னார்குடியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கார்த்திக்கின் என்பவரின் சகோதரர் அர்ஜுன், பணியாளர் பிரதீபன் ஆகியோர் தஞ்சையில் இருந்து ரூ.44 லட்சத்தை பெற்றுக்கொண்டு, ஊர் திரும்பியுள்ளனர். அப்போது, வாண்டையார் இருப்பு பேருந்து நிறுத்தம் அருகே மர்ம நபர் ஒருவர் தன்னை குற்றப்பிரிவு காவலர் என கூறி, அவர்களிடமிருந்த பணம் மற்றும் செல்போன்களை பறித்து தப்பிச் சென்றார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News December 10, 2025
தஞ்சாவூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில்,<
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை SHARE செய்யுங்கள்!
News December 10, 2025
தஞ்சாவூர்: பள்ளி மாணவி தற்கொலை – பெரும் சோகம்

திருவிடைமருதூரைச் சேர்ந்தவர் மாணவி கல்பனா. 10 ஆம் வகுப்பு படித்துவரும் இவர், சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கல்பனா உடல்நிலை சரியில்லை என பள்ளிக்குச் செல்லாமல், பெற்றோர் வெளியே சென்ற நேரம் பார்த்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்வம பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


