News December 9, 2025
திருச்சி அருகே 50 சவரன் நகை கொள்ளை

செங்காட்டுபட்டி அடுத்த கீரம்பூர் பகுதியில் வசிக்கும் சகோதரர்களான சசிகுமார், சிவகுமார் ஆகியோரது வீடுகளில் பூட்டை உடைத்து ஆளில்லாத நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள், 50 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், பிடாரமங்கலம், சீலைப்பிள்ளையார்புதூர், நாகையநல்லூர், சின்னப்பள்ளிபாளையம், பெரியப்பள்ளிபாளையம், பெரியநாயக்கன்பட்டி, புதுப்பாளையம், சீதப்பட்டி, கேசரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
News December 25, 2025
திருச்சி: வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் 27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வாக்காளர்கள் கலந்து கொண்டு, தங்களது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
திருச்சி: வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் 27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வாக்காளர்கள் கலந்து கொண்டு, தங்களது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.


