News December 9, 2025
நவல்பட்டு: விமான நிலையத்தில் விலங்குகள் பறிமுதல்

மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நேற்று (டிச.8) திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் 32 அல்பினோ சிகப்பு காது ஆமைகள், 3 அல்பினோ ரக்கூன்ஸ், 13 கிரீன் இகுவானா ஆகியவற்றை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து விலங்குகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 12, 2025
திருச்சி: 12 பேர் கைது – தனிப்படை அதிரடி

மணப்பாறை அடுத்த குமரபட்டி பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக எஸ்பி செல்வ நாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டதில் பணம் வைத்து சீட்டு கட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பேரை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
News December 12, 2025
திருச்சி: 12 பேர் கைது – தனிப்படை அதிரடி

மணப்பாறை அடுத்த குமரபட்டி பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக எஸ்பி செல்வ நாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டதில் பணம் வைத்து சீட்டு கட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பேரை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
News December 12, 2025
திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் வரும் 13, 14 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்பு பணியானது வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், சிறப்பு முகாம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிறப்பு முகாமானது வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


