News December 9, 2025

வைகை அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

image

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் கிருதுமால்நதி பகுதிக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கிருதுமால் நதி பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று 4 மணியிலிருந்து நிறுத்தப்பட்டது. தற்போது அணையில் இருந்து இரண்டாம் போக பாசனம் மற்றும் குடிநீருக்காக என 769 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Similar News

News December 24, 2025

தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News December 24, 2025

தேனி: தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகள், மருமகன்!

image

போடி பகுதியை சேர்ந்தவர் அழகுத்தாய் (65). இவரது மகள் கவிதா. அவரது கணவா் சந்திரன். கவிதாவின் மகள் பாலகௌரி காதல் திருமணம் செய்து கொண்டாா். இதற்கு தனது தாய் அழகுத்தாய் உடந்தையாக இருந்ததாகக் கூறி அவரைக் கவிதாவும், சந்திரனும் சோ்ந்து தாக்கியதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் போடி தாலுகா போலீஸாா் கவிதா, சந்திரன் ஆகியோா் மீது நேற்று (டிச.23) வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News December 24, 2025

கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்புசி முகாம்

image

தேனி மாவட்டத்தில் பசு மற்றும் எருமை இனங்களுக்கு கோமாரி நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் டிச.29 முதல் 18.01.2026 வரை 21 நாட்களுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கால்நடை மருத்துவமனயில் கோமாரி நோய் தடுப்புசி முகாம் நடைபெற உள்ளது. எனவே, தங்களது கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!