News December 9, 2025
மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025-ம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி வரும் டிச.,12-ம் தேதி அன்று காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. அதில் 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 7401703459 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 12, 2026
மயிலாடுதுறை: உங்களை தேடி வரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <
News March 12, 2026
186 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் 53 தேர்வு மையங்களில் நேற்று தொடங்கியது.இதில், 5915 மாணவர்கள், 6063 மாணவிகள் என மொத்தம் 11,978 மாணவ மாணவிகள் நேற்று தேர்வு எழுதினர். விண்ணப்பித்திருந்த 186 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மேலும் 70 பறக்கும்படையினர், 56 நிலையான படைகள், 14 வழித்தட அலுவலர்கள், 53 முதன்மை கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
News March 12, 2026
புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் முதல்வர்!

மயிலாடுதுறை மணக்குடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இப்பேருந்து நிலையம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை(மார்.13) தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளதாக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பேருந்து நிலைய திறப்பு விழா முன்னேற்பாடுகளை எம்எல்ஏ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


