News December 8, 2025

புடினை தொடர்ந்து இந்தியா வரும் ஜெலன்ஸ்கி

image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில்தான் புடின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விசிட்டில் PM மோடி அவரிடம் உக்ரைன் உடனான போர் குறித்து பேசியதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து ஜெலன்ஸ்கியும் இந்தியா வரவுள்ளதால், உக்ரைன் தரப்பு கோரிக்கைகளை PM கேட்டறியலாம். இதன்பிறகு, அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

Similar News

News December 30, 2025

பள்ளிகளுக்கு மேலும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜன.5-ம் தேதி திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், பொங்கல் பண்டிகை (ஜன.15, 16, 17), குடியரசு தினம்( ஜன.26) என அரசு விடுமுறைகள் அடுத்தடுத்து வருகின்றன. மேலும், வார விடுமுறை உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் ஜனவரியில் மொத்தம் 15 நாள்கள் விடுமுறையாகும். 2026-ம் ஆண்டில் மொத்தமாக 26 நாள்கள் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News December 30, 2025

திமுக வாக்குறுதி.. நீங்களும் கருத்து தெரிவிக்கலாம்!

image

2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் பணிகள் வேகமெடுத்துள்ளன. அந்த வகையில், சமீபத்தில் திமுக தரப்பில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக வாக்குறுதிகள் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக புதிய செயலியை (App) நாளை CM ஸ்டாலின் அறிமுகம் செய்யவுள்ளார்.

News December 30, 2025

மகளிர் உரிமைத் தொகை அதிகரிப்பு.. வந்தாச்சு அப்டேட்

image

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என <<18565227>>CM ஸ்டாலின்<<>> ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதற்கான அறிவிப்பு வரு மார்ச் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை ₹1,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது, 1.30 கோடி மகளிருக்கு மாதம் ₹1,000 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!