News April 28, 2024

தாயை கொலை செய்த மகன் 4 ஆண்டு பிறகு கைது

image

மணல்மேடை சேர்ந்த சண்முகம் மனைவி ஜானகி (70) ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என ஜானகியின் 2வது மகன் பாரதிதாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவரின் முதல் மகன் பாரிராஜன் தான் தாயை அடித்து கொலை செய்ததாக சிபிசிஐடி போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

Similar News

News August 17, 2025

மாணவர்களை எச்சரித்த நாகை ஆட்சியர்!

image

நாகை மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசின் இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வில் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கி தருவதாக கூறும் இடைதரகர்களை நம்ப வேண்டாமென மாணவர்களுக்கு ஆட்சியர் எச்சரித்துள்ளார்

News August 17, 2025

நாகை: MBA முடித்தவர்களுக்கு ரூ.93,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து, வரும் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு திருச்சி மற்றும் தஞ்சையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 17, 2025

நாகை: திடீர் மின்தடையா ? உடனே கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

error: Content is protected !!