News December 7, 2025

நெல்லை: தாய் இறந்த துக்கம் தாளாமல் மகன் தற்கொலை

image

விகேபுரம் அருகே சிவந்திபுரத்தை சேர்ந்த ஐடி ஊழியர் வேலாயுதம் (25). தாய் அமுதவள்ளியை இழந்து மனமுடைந்த அவர், மது பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில், நேற்று வீட்டில் துர்நாற்றம் வீசியதால், விகேபுரம் போலீசார் கதவை உடைத்து சென்ற போது, வேலாயுதம் மின் விசிறியில் தூக்கிட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தாய் இறந்த சோகத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 10, 2025

நெல்லை: சொந்த தொழில் தொடங்க அரிய வாய்ப்பு?

image

நெல்லையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 10, 2025

நெல்லையப்பர் கோவிலில் தீபம் ஏற்றியவர் கைது

image

நெல்லையப்பர் கோயிலில் காசி, மதுரா கோவில் ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டி அகில பாரத இந்து மகாசபா சார்பில் டிச. 6-ம் தேதி அகல் விளக்கு தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், மாநிலத் துணைத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். அனுமதியின்றி தீபம் ஏற்றியதாக நேற்று டவுன் போலீசார் கணேசன் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

News December 10, 2025

நெல்லை: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

image

1. <>இங்கு க்ளிக்<<>> செய்து ரேஷன் கார்டு விண்ணப்ப படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!