News December 7, 2025
தி.மலை: கன்டெய்னர் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து!

கோவையில் இருந்து சென்னை நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்தவாசி வழியாக சென்று கொண்டிருந்தது. வந்தவாசி -மேல்மருவத்தூர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரின் மீது மோதி சாலை ஓரத்தில் கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் டிரைவர் பாலாஜி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
Similar News
News December 11, 2025
தி.மலை: ஆசிரியர் பணிக்கு 2,09,200 வரை சம்பளம்.. APPLY NOW!

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருந்தால் போதும், சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. டிச.11 இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <
News December 11, 2025
திருவண்ணாமலை: அரசு பேருந்து ஜப்தி!

இரன்டு வெவ்வேறு விபத்து வழக்குகளில் நீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காத காரணத்தால் ஆரணி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. போளூரைச் சேர்ந்த ஹரி என்பவரின் உயிரிழப்புக்காக ரூ. 23.74 லட்சம் சேத்துப்பட்டை சேர்ந்த சீனு என்பவரின் காயம் தொடர்பாக ரூ. 4.59லட்சம் ஆகிய தொகைகளை வட்டியுடன் வழங்கத் தவறியதால், நீதிபதி உத்தரவின்பேரில் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
News December 11, 2025
தி.மலை: சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலி

நல்லவன்பாளையம் டேம் குழாய் தெருவைச் சேர்ந்தவர் காசியம்மாள் (70). இவர் கடந்த 9-ம் தேதி மாலையில் மாவு அரைக்கச் சென்றபோது, தி.மலை- தண்டராம்பட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த காசியம்மாள், தி.மலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது கணவர் லட்சுமணன் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.


