News April 27, 2024
வெயில் தாக்கம் நிவாரணம் வழங்கிடுக-மாஜி அமைச்சர்

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள், தொழிலாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று, நிவாரணம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார். உசிலம்பட்டியில் இன்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுங்கட்சி செய்ய வேண்டியதை எதிர்க்கட்சியாக இருந்து பழனிச்சாமி மக்களுக்கு சேவை செய்து வருவதாக தெரிவித்தார்.
Similar News
News August 19, 2025
மதுரை: வேலை வேண்டுமா ஆக.22 மிஸ் பண்ணிடாதீங்க

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்கள் சுயவிவரங்களை <
News August 19, 2025
காவல்துறை அலட்சியத்தால்.. – எவிடென்ஸ் கதிர் பதிவு

மேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காதல் விவகாரத்தில் சதீஷ்குமார் என்ற இளைஞர் கார் ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இளைஞருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க தவறியதன் காரணமாக இந்த கொடூரம் அரங்கேரி உள்ளதாக எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கதிர் பதிவு செய்துள்ளார்.
News August 19, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (18.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.