News April 27, 2024
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது எனக் கூறி மத்திய அரசு வஞ்சிப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மத்திய அரசிடம் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணமாக ₹37,907 கோடி வழங்கக் கோரிய நிலையில், நீதிமன்றத்தை நாடிய பிறகு ₹276கோடி அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்
Similar News
News August 26, 2025
வரலாற்றில் இன்று

*1910 – நோபல் பரிசு வென்ற அன்னை தெரசா பிறந்த தினம்
*1954 – நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கிரண் பிறந்த தினம்
*1966 – தென்னாப்பிரிக்காவில் எல்லைப் போர் ஆரம்பமானது
*1972 – 22-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியில் தொடங்கியது
*1978 – விண்ணுக்கு பயணித்தார் முதல் ஜெர்மனி விண்வெளி வீரர் சிக்மண்ட் ஜான்.
News August 26, 2025
புதிய வருமான வரி விதிகள்… டிசம்பரில் முக்கிய அறிவிப்பு

வரும் டிசம்பருக்குள் புதிய வருமான வரி விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த ஆக.,12-ம் தேதி புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உரிய தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலும் டிடிஎஸ் தொகையை கோர இந்த மசோதா வழிவகுத்துள்ளது. வருமான வரி தாக்கலை எளிமைப்படுத்தும் பல அம்சங்களும் இதில் உள்ளதாம்.
News August 26, 2025
SKவின் ‘அமரன்’ படத்துக்கு கேரளாவில் விருது

கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில், ‘அமரன்’ ‘சிறந்த பிறமொழித் திரைப்படம்’ விருதை வென்றுள்ளது. ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு, கேரள அமைச்சர் வாசவன் விருது வழங்கி கெளரவித்தார். சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதை தழுவி எடுக்கப்பட்டது.