News December 6, 2025

ரயிலில் இதை செய்தால் 5 ஆண்டுகள் சிறை.. Must Read

image

ரயிலில் பயணிக்கும் போது வாட்டர் கெட்டிலை பயன்படுத்தக்கூடாது என RPF எச்சரித்துள்ளது. ஏனென்றால், குறைந்த மின்னழுத்தம் கொண்ட சார்ஜிங் பாயிண்டில் இதுபோன்ற மின் சாதனங்களை பயன்படுத்தினார் உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏற்படலாம். இந்நிலையில் ரயில்களில் கெட்டில் பயன்படுத்தினால் ₹1,000 அபராதம் (அ) 5 ஆண்டுகள் சிறை தண்டனை (அ) இரண்டுமே விதிக்கப்படும் என RPF தெரிவித்துள்ளது.

Similar News

News April 4, 2026

BREAKING: தங்கம் விலை கிராமுக்கு ₹100 உயர்வு!

image

சென்னையில், தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக சவரனுக்கு ₹800 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் இன்று(ஏப்.4) 1 கிராம் ₹13,950-க்கும், சவரன் ₹1,11,600-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் இந்த வாரம் தங்கம் விலை ஏறுமுகத்தை கண்டதன் எதிரொலியே நம்மூரில் கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ₹1,600 உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

News April 4, 2026

மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி: ஸ்டாலின்

image

CBSE-யில் 6-ம் வகுப்பு முதல் 3-வது மொழி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, இந்தியை திணிக்கும் முயற்சி என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த அணுகுமுறை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது, திணிக்கப்பட்ட ஒருமைப்பாட்டில் அல்ல என சாடினார். மேலும், இந்தி திணிப்புக்கு எதிராக அதிமுக குரல் கொடுக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 4, 2026

கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் மரணம்.. அடுத்த துயரம்

image

பிஹாரின் துர்க்கவுலியா & ரகுநாத்பூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 2016 முதல் பிஹாரில் மதுவிலக்கு உள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மரணிக்கும் துயரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016 முதல் தற்போது வரை கள்ளச்சாராயத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்துள்ளது.

error: Content is protected !!