News December 6, 2025
தருமபுரி:போலி மருத்துவர் கைது!

தருமபுரி மருத்துவம் & ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமையில், போலி மருத்துவர்கள் ஒழிப்புக் குழுவினர் அதியமான்கோட்டையில் கிளினிக் வைத்து நடத்திவந்த ஒரு வீட்டில் நேற்று ஆய்வு செய்தனர்.அங்கு கணேசன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.மருத்துவக் குழுவினர் விசாரணையில், அவர் பிளஸ் 2 வரை படித்த நிலையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததை எடுத்து காவலர்கள் அவரை கைது செய்தனர்.
Similar News
News December 6, 2025
தருமபுரி: Whats App மூலம் ஆதார் அட்டை!

தருமபுரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (+91 9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News December 6, 2025
தருமபுரி:30டன் ரேஷன் அரிசி கடத்தல் -ஒருவர் கைது!

பென்னாகரம் பிரதான சாலையில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ர. (TN34V4487) சோதனை செய்தபோது பொக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொது விநியோகதிட்ட ரேஷன் அரிசி 600 முட்டைகளில் மொத்தமாக 30,000 கிலோ (30டன்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த வாகனம் மற்றும் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை கைப்பற்றி சாமிசெட்டிப்பட்டி சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 6, 2025
தருமபுரி:அரசு வழக்கறிஞர் (கல்பனா) லஞ்சம் வாங்கி கைது !

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வீரய்யன் என்பவரின் மகளுக்கு பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி வழக்கு அவரது தந்தையிடம் ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய தர்மபுரி போக்ஸோ நீதிமன்ற அரசு வக்கீல் கல்பனா என்பரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று டிச-5 கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை.


