News April 27, 2024
மளிகைப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக மிளகாய் தூள், மஞ்சத்தூள், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பொட்டுக் கடலை, கடுகு, சர்க்கரை உள்ளிட்ட 22 பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே காய்கறி, பழங்களின் விலை விண்ணை முட்டும் சூழலில், மளிகைப் பொருட்களும் விலை உயர்வது வேதனையளிப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 18, 2025
ரேஷன் கடைகளில் இலவச நாப்கின்.. HC-ல் மனுதாக்கல்

ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின் வழங்க கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு மெட்ராஸ் HC உத்தரவிட்டுள்ளது. அதிக விலை காரணமாக நாப்கின்களை வாங்க முடியாத கிராமப்புற பெண்கள், மாற்று நடைமுறைகளை பின்பற்றுவதாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், பள்ளி மாணவியருக்கு நாப்கின் வழங்குவது போல் ரேஷன் கடைகளிலும் வழங்க உத்தரவிடுமாறு கோரப்பட்டு இருந்தது. அடுத்தக்கட்ட விசாரணை, டிச.16-ல் நடைபெறவுள்ளது.
News November 18, 2025
இள வயதிலேயே முகச் சுருக்கம் வந்துருச்சா? Solution!

இள வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட மன அழுத்தம், தூக்கமின்மை என பல காரணங்கள் இருக்கிறது. இதை சரி செய்யவே முடியாதா என நீங்கள் வருந்தவேண்டாம். ▶இரவு நேரத்தில் கற்றாழை ஜெல்லை கொண்டு 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள் ▶வாழைப்பழம் / பப்பாளி சாறை முகத்தில் தடவலாம் ▶தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவது சிறந்தது ▶மன அழுத்தத்தை குறைப்பதும் அவசியம். பலருக்கு உதவும் SHARE THIS.
News November 18, 2025
ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு ₹2,000.. வந்தது அப்டேட்

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹2,000 வழங்க CM ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். அதற்கான நிதி ஏற்பாடுகளை செய்யுமாறு நிதித்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருப்பதாக தமிழக அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், வழக்கம்போல் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


