News April 27, 2024
மோடி தமிழகத்தை வஞ்சித்து வருகிறார்

தமிழக மக்கள் மீது மோடி கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், ரூ.38 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டதற்கு மத்திய அரசு ரூ.275 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். கர்நாடகாவுக்கு ரூ.3454 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News August 13, 2025
திமுகவில் இணைந்தது ஏன்? மைத்ரேயன் விளக்கம்

அமைப்பு செயலாளராக இருந்த தன்னை அதிமுக சரியாக பயன்படுத்தவில்லை என திமுகவில் இணைந்த மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் பெரும் குழப்பம் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். EPS பிரச்சாரத்துக்கு வரும் கூட்டம் அழைத்து வரப்படும் கூட்டம் மட்டுமே என்றும் அவர் மக்கள் தலைவர் இல்லை எனவும் கூறியுள்ளார்.
News August 13, 2025
‘கூலி’ படத்துக்கு போலி டிக்கெட்கள் ! ரசிகர்கள் அதிர்ச்சி

நாளை வெளியாக உள்ள ‘கூலி’ படத்துக்கான டிக்கெட்கள் மளமளவென விற்றுத்தீர்ந்துள்ளன. நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான் உள்ளிட்டோரும் படத்தில் உள்ளதால் தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதை பயன்படுத்தி டிக்கெட்டை ₹500 முதல் ₹3,000 வரை விற்கின்றனர். இதுபோதாது என போலி டிக்கெட்களும் கூலி படத்துக்கு விற்பனையாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. Careful மக்களே!
News August 13, 2025
அபிமன்யுவிற்கு சான்ஸ் கொடுக்க வேண்டும்: கங்குலி

அபிமன்யு ஈஸ்வரனுக்கு டெஸ்ட்டில் வாய்ப்பு வழங்க வேண்டும் என கங்குலி வலியுறுத்தியுள்ளார். அணியில் 3-வது இடத்தில் களமிறங்க அவர் பொருத்தமானவர் எனவும் தெரிவித்துள்ளார். அபிமன்யு கடந்த 4 ஆண்டுகளாக அணியில் இடம்பெற்றாலும், பிளேயிங் 11-ல் இடம்பெறவில்லை. முன்னதாக, தனது மகனுக்கு பின்பாக அணியில் இடம்பெற்ற 15 வீரர்கள் டெஸ்ட்டில் அறிமுகமாகிவிட்டதாக அவரது தந்தை ரங்கநாதன் வருத்தம் தெரிவித்திருந்தார்.