News December 5, 2025
ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி – அரசு மானியம்

கோவில்பட்டி, எட்டையாபுரம் வட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். பருத்திப் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படுகிறது. இந்தபூச்சிக்கொல்லி மருந்தை ட்ரோன் மூலம் அடிப்பது மூலம் செயல் திறன், கூலி, நேரம் ஆகியவை மிச்சமாகிறது. எனவே டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க அரசு ஒரு ஹெக்டருக்கு ரூ.1250 பின்னேற்பு மானியமாக வழங்குகிறது என வேளாண் துறை தெரிவித்துள்ளது.
Similar News
News March 8, 2026
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கோர்ட் தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பகுதியில் உள்ள ஒரு சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு நேற்று தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News March 8, 2026
5 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேல் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் குற்றத்தில் ஈடுபட்ட சசிகுமார் (30) என்பவரை கைது செய்து நகையை மீட்டனர்.
News March 8, 2026
5 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேல் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் குற்றத்தில் ஈடுபட்ட சசிகுமார் (30) என்பவரை கைது செய்து நகையை மீட்டனர்.


