News December 5, 2025
தூத்துக்குடி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News March 11, 2026
தூத்துக்குடி: போட்டோ கிராபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் கண்ணன் (28) என்பவர் கழுகுமலையில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது ஸ்டூடியோவில் புகுந்த 2 மர்ம நபர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி, கம்பால் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த குமார் (23) மற்றும் முத்து (20) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
News March 10, 2026
தூத்துக்குடி: ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <
News March 10, 2026
தூத்துக்குடி: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

தூத்துக்குடி மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.


