News April 27, 2024
பொய் வழக்குகளுக்கு அஞ்ச மாட்டோம்

எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியால் நாட்டுக்கு சாதனை என்று எதுவுமில்லை என்ற அவர், நாட்டின் மானம் தான் பறிபோனதாக விமர்சித்துள்ளார். மேலும், பாஜக என்றாலே அட்சதை மற்றும் காவி நிறம் மட்டுமே என்றும் அவர் கேலி செய்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கேசிஆர் மகள் கவிதாவை ED கைது செய்துள்ளது.
Similar News
News August 25, 2025
பனீரை விரும்பி சாப்பிடுகிறீர்களா..

தற்போது பல இந்தியாவில் 83% போலி பனீர்கள் விற்கப்படுவதாக Food Safety and Standards Authority of India எச்சரித்துள்ளது. இந்த போலி பனீர், மைதா, ArrowRoot powder, Urea போன்றவற்றை கலந்து தயாரிக்கப்படுகிறது. பனீரின் மீது Iodine Tincture-ஐ விடும் போது, அது கருப்பாக மாறினால், அது போலி. ஒரிஜினல் பனீரில், அது படிமனாக தங்கி விடும். குடல், கிட்னி போன்றவற்றுக்கு இந்த போலி பனீர் பிரச்னையை உண்டாக்குமாம்.
News August 25, 2025
திமுகவுடன் கூட்டணி இல்லை.. விஜய்யுடன் கூட்டணியா?

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம், கவின் ஆவணக் கொலை வழக்கு ஆகியவற்றில் திமுக அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார், இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். CM ஸ்டாலினை ‘Uncle’ என விஜய் அழைத்ததில் தவறில்லை என்ற அவர், தவெக தரப்பில் கூட்டணிக்கு அழைத்தால் பரிசீலிப்போம் என்றார்.
News August 25, 2025
கடவுளைக் காண 21 பேர் உயிர்த்தியாகம்?

ஆயுள் தண்டனை கைதியான சந்தா ராம்பால் என்ற சாமியாரின் புத்தகத்தை, கர்நாடகாவைச் சேர்ந்த துகாரம் என்பவர் படித்துள்ளார். இதனையடுத்து, இவர் உள்பட 21 பேர், கடவுளைக் காண்பதற்காக உயிர்த்தியாகம் செய்யவுள்ளதாக கூறி வந்துள்ளனர். இதன்பேரில் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அடுத்து, இம்முடிவை அவர்கள் கைவிட்டுள்ளனர். என்றுதான் மூடநம்பிக்கைகள் முடிவுக்கு வருமோ?