News December 5, 2025
வேலூர்: அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மர்ம நபர்!

வேலூர்: குடியாத்தம் அருகே, பாண்டிச்சேரியில் இருந்து வந்த அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற முரளி (50) என்பவர், காட்பாடி நான்கு முனை கூட்ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபரால் தாக்கப்பட்டார். காயமடைந்த ஓட்டுநர் முரளி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து உதயகுமார் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
வேலூர்: நாளை மின்தடை எற்படும் பகுதிகள்!

வேலூர், மேல்பாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (டிச.6) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வெப்பாலை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசக்குப்பம், பொன்னை, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொண்டகுப்பம், குமணதாங்கள், பெருமாள் குப்பம், கோட்டநத்தம் மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.
News December 5, 2025
வேலூர்: பெண்களின் பாதுகாப்பு எண்கள்!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்
News December 5, 2025
வேலூர்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்!

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.


