News December 4, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
BREAKING: சென்னையில் போலி மருத்துவர் கைது!

சென்னை அண்ணா நகரில் பாத்தாவது கூட தேர்ச்சி பெறாமல் SRS ஆயுர்வேதா மருத்துவமனை நடத்திய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலத்தைச் சேர்ந்த ரவிக்கு தவறான சிகிச்சை அளித்த நிலையில் டிஎம்ஸ், ஆயுர்வேதா ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் போலி மருத்துவர் வெங்கடேஸ்வரனை காவல்துறையினர் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News December 5, 2025
சென்னையில் 10.40 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம்?

சென்னையில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 10.40 லட்சம் பேர் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. சென்னையில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 90 ஆயிரம் பேரும், மயிலாப்பூர் தொகுதியில் 88 ஆயிரம் பேரும், கொளத்தூர் தொகுதியில் 73 ஆயிரம் பேரும், சேப்பாக்கம்- திருவல்லிகேணி தொகுதியில் 83 ஆயிரம் பேரும், குறைந்தபட்சமாக திரு.வி.க.நகர் தொகுதியில் 32 ஆயிரம் பேரும் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
News December 5, 2025
சென்னை: கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை!

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. கோவில் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், R-7 கே.கே.நகர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ரஞ்சன் (18) என்பவரை இன்று கைது செய்து, ரூ.7,000/- மீட்கப்பட்டது.


