News December 4, 2025
தருமபுரியில் 2026 தேர்தல் வாக்காளர் திருத்தம் தொடக்கம்

2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 11.12.2025 முதல் 27.12.2025 வரை பதிவுகள் பெறப்படும். மேலும், இறந்தோர், இடம்பெயர்ந்தோர், இரட்டை பதிவு, பட்டியல் வெளியிடப்பட்டு திருத்தங்கள் செய்யப்படும். பின், 12.85 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படும். என இன்று (டிச.04) அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
தருமபுரி: முஸ்லிம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சாமியார்

பொம்மிடி நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ரஷியா பானுவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்த ஆண்கள் எழுந்து வேறு இடம் சென்றனர். தொடர்ந்து பெண்கள் ஒன்றாக சேர்ந்து சேலைகளை சுற்றி தடுப்பு ஏற்படுத்தினர். அப்போது, காவி உடை அணிந்த சாமியார் போன்ற தோற்றத்தில் இருந்த பெண் ஒருவர் வந்து அவருக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
News December 5, 2025
தருமபுரியில் 30,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

தருமபுரி – பென்னாகரம் பிரதான சாலையில் நேற்று சந்தேகத்துக்கிடமான வகையில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதை போலீஸாா் சோதனை செய்ததில், 600 முட்டைகளில் 30,000 கிலோ (30 டன்) ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரி மற்றும் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ரேஷன் அரிசியை கடத்திச்செல்ல முயன்ற தருமபுரி மாவட்டம், சாமிசெட்டிப்பட்டியைச் சோ்ந்த ரா.ஆனந்தகுமாரை கைது செய்தனா்.
News December 5, 2025
தருமபுரி: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் , தோப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் நாகராஜ் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்!


