News April 27, 2024
திருச்சியில் வீசும் வெப்ப அலையால் மக்கள் அவதி,

திருச்சியில் வீசும் வெப்ப அலையால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். காலை பொழுதே கடும் வெப்பத்துடன் தான் விடிகிறது .பகல் 11 மணி முதல் மதியம் மூன்று மணி வரை வெப்ப அலை வீசுகிறது. மாநகர பஸ்களில் பயணிக்கும் பயணிகள் வியர்வையில் குளித்தபடி செல்வதை நேற்று காண முடிந்தது. மேலும் வாகன ஓட்டி களுக்காக ,சிக்னல்களில் துணி பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியில் செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர்.
Similar News
News August 23, 2025
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வரும் ஆக.,26-ம் தேதி தொடங்கி செப்.09 வரை நடைபெற உள்ளது. இதில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் ஆன்லைனில் பதிவு செய்த படிவம் மற்றும் ஆதார் நகலுடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் விபரங்களுக்கு 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 22, 2025
உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி

திருச்சி, பஞ்சப்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வரும் 25-ம் தேதி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி முகாம் நடைபெற உள்ளது. எனவே இதில் 12-ம் வகுப்பு பயின்ற உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கலந்து கொண்டு கல்வி கடன், உதவித்தொகை விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று அறிவித்துள்ளார்.
News August 22, 2025
திருச்சி – காரைக்கால் டெமு ரயில் பகுதியாக ரத்து

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8:35 மணிக்கு இயக்கப்படும் திருச்சி – காரைக்கால் டெமு ரயில், பல்வேறு பொறியியல் பணிகள் காரணமாக வரும் 24, 25, 27, 28 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் இருந்து, திருவாரூர் ஜங்சன் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.