News April 27, 2024
மாலத்தீவில் சீன உளவுக் கப்பல்

சீன உளவுக் கப்பல் 2 மாதங்களுக்கு பிறகு மாலத்தீவுக்கு மீண்டும் வந்துள்ளது. மாலத்தீவு அதிபராக மொய்சூ பதவியேற்ற பிறகு, அந்நாடு இந்தியாவின் போட்டி நாடான சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. மாலத்தீவுக்கு பிப்ரவரி மாதம் சீனாவின் சியாங் யாங் ஹாங் 3 என்ற கப்பல் வந்து ஒரு வாரம் முகாமிட்டிருந்தது. பிறகு திரும்பிச் சென்ற அக்கப்பல், 25ஆம் தேதி மீண்டும் வந்து துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2026
ஒரு தொலைபேசியில் PM மோடி போரை நிறுத்தி விடுவார்: UAE

வளைகுடா நாடுகளின் மீதான ஈரானின் தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என இந்தியாவுக்கான UAE தூதர் ஹுசைன் ஹர்சன் மிர்சா தெரிவித்துள்ளார். பத்து நாட்களுக்கு முன்பு PM மோடி இஸ்ரேலில் இருந்தார்; ஈரானின் எண்ணெயை அதிகம் வாங்கும் அவர் மிக நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றார். இஸ்ரேல் – ஈரான் இடையேயான பிரச்சனையை, ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் PM மோடி தீர்த்து வைத்துவிடுவார் எனவும் கூறியுள்ளார்.
News March 10, 2026
Uber, Ola, Rapido-க்கு தடை!

மகாராஷ்டிராவில் Ola, Uber, Rapido ஆகியவற்றின் பைக் டாக்சி சேவைகளுக்கான தற்காலிக லைசென்ஸ்களை அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. அம்மாநிலத்தில் இந்த நிறுவனங்கள் E-bike டாக்சிகளை மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் லைசென்ஸ் பெற்றுவிட்டு, இந்நிறுவனங்கள் E-bike களுக்கு பதிலாக பெட்ரோல் பைக்குகளை இயக்கியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
News March 10, 2026
த்ரிஷாவின் குற்றச்சாட்டு 100% பொய்: பார்த்திபன்

<<19332195>>தனது பேச்சுக்கு த்ரிஷா கண்டனம்<<>> தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக வீடியோ வெளியிட்டுள்ளார் பார்த்திபன். குற்றம் சுமத்துகிற மாதிரி த்ரிஷாவின் போட்டோவை போட்டு தான் பேச ஆசைப்பட்டதாக கூறுவது 100% பொய்; யாரிடமும் காசு வாங்கிவிட்டு அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு போகவில்லை என்றார். தொகுப்பாளர் ‘குந்தவை’ என கூறியதும், அது ஒரு வார்த்தை ஜாலமாக தோன்றியதால் தான் அப்படி பேசியதாகவும் கூறியுள்ளார்.


