News December 4, 2025
ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் சிவகாசி பகுதியில் உள்ள தனியார் லாரி சர்வீஸில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அங்கு உரிமையாளருடன் லோடு இறக்குவது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்து வந்தார். இதனால் விரக்தியில் இருந்த சசிகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்
Similar News
News December 4, 2025
ஸ்ரீவி., ஆடுகள் திருட்டு; சென்னை போலீசுக்கு தொடர்பா

ஸ்ரீவி., அருகே கொளுஞ்சிபட்டியில் நவ.,13ல் ராஜகோபால் என்பவரின் 5 ஆடுகள், நத்தம்பட்டி லட்சுமிபுரத்தில் ராமர் என்பவரின் 2 ஆடுகள் திருடு போயின. இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் நிலையூர் பிரசாத் 24, ஸ்ரீவி., முத்து 28, ஆகிய இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவத்தில் மதுரையை சேர்ந்த இருவர், சென்னையில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக பிடிப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
News December 4, 2025
விருதுநகர்: டிகிரி போதும்.. ரூ85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

விருதுநகர் மக்களே மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் இங்கு <
News December 4, 2025
கூமாப்பட்டி இளைஞருக்கு கொலை மிரட்டல்

கூமாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் இராமசாமியாபுரம் ஊர் நாட்டாண்மையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் மகேஷ் ஆகியோரிடம் முனியாண்டி பொதுவான சுற்றுச்சுவரை உடைத்ததை தட்டி கேட்டுள்ளார். இதற்காக முனியாண்டியை இருவரும் சேர்ந்து தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கூமாபட்டி போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


