News December 4, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்துப் பணி நிலவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்., அல்லது 100-ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
ராணிப்பேட்டையில் SIR பணிகள் ஆலோசனை!

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 283 பாகங்களில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று (டிச.03) புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் கு.ராஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தேச பட்டியல் வழங்கப்பட்டது. பின் குறைபாடுகள் இருப்பின் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
News December 4, 2025
ராணிப்பேட்டையில் நாய் கடித்து பலி!

ராணிப்பேட்டை மாவட்டம், மகேந்திரவாடி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் தனது கொட்டகையில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று (டிச.04) கலைச்செல்விக்கு சொந்தமான ஒரு பெரிய ஆடு, 6 சிறிய ஆட்டுக்குட்டிகள் என 7 ஆடுகளை நாய் கடித்து இறந்தது தெரிய வந்தது. பின், நெமிலி வட்டாட்சியர் மற்றும் பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.
News December 4, 2025
ராணிப்பேட்டை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*


