News December 3, 2025
ஏக்கருக்கு ₹40,000 இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ₹8,000 வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், சம்பா, தாளடி பயிர்களுக்கு விவசாயிகள் இதுவரை ஏக்கருக்கு ₹30,000 வரை செலவு செய்திருக்கும் நிலையில், அரசின் நிவாரணம் போதாது என அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 5, 2025
கடைசி வரை நிறைவேறாமல் போன ஜெயலலிதாவின் ஆசை

அரசியலில் ஆண்களுக்கே சிம்மசொப்பனமாய் திகழ்ந்த Ex CM ஜெ.,வுக்கு அரசியலை விட்டு விலகும் எண்ணம் இருந்தது என்றால் நம்பமுடிகிறதா? ஆம், அரசியல் ரேஸிலிருந்து விலகி, புக்ஸ், மியூசிக், செல்லப்பிராணியுடன் தோட்டத்தில் நேரத்தை செலவிட ஆசைப்படுவதாக 1999-ல் இண்டர்வியூ ஒன்றில் அவர் கூறியிருக்கிறார். யாரையும் சந்திக்காமல், எதுவும் பேசாமல் அமைதியான வாழ்க்கையை வாழவேண்டும் என்ற அவருடைய ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை.
News December 5, 2025
FLASH: ஏறுமுகத்தில் பங்குச்சந்தைகள்!

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏறுமுகத்தில் உள்ளன. மும்பையில் நடைபெற்ற நாணயக் கொள்கை குழு(MPC) கூட்டத்தின் முடிவுகளின்படி குறுகிய கால கடன்களுக்கான <<18475076>>வட்டி விகிதத்தை 0.25%<<>> குறைத்து RBI கவர்னர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், சென்செக்ஸ் 153 புள்ளிகள் உயர்ந்து 85,418 புள்ளிகளிலும், நிஃப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 26,080 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன.
News December 5, 2025
உங்க ஊரில் வேலை வேணுமா? Way2News-ல் பாருங்கள்!

Way2News ஆப், புதிதாக உள்ளூர் வேலைவாய்ப்புகள் பிரிவை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் ஊரில் உள்ள தொழிற்சாலை, அலுவலக, திறன்சார்ந்த மற்றும் டெலிவரி பாய் உள்பட அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிய Way2News app-ல் உள்ள Jobs பிரிவில் பார்த்து பயனடையுங்கள். உங்களுக்கு மெனுவில் Jobs பிரிவு வரவில்லை எனில் Way2News App-ஐ அப்டேட் செய்யவும்.


