News April 27, 2024

கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

image

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது. அதில், ஐஎஸ் ஆதரவாளர் அசாருதீன் கைதைக் கண்டிக்கும் விதமாக கோவையில் கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 அக் 23இல் கோவை – உக்கடத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தாஹா நசீர் உள்ளிட்ட 14 பேரை என்ஐஏ கைது செய்தது.

Similar News

News August 11, 2025

கோலி, ரோகித் ஓய்வு பெற அழுத்தம்?

image

ஆஸி.,க்கு எதிரான ODI தொடருக்குப்பின் கோலி, ரோகித் ஓய்வு பெற BCCI அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியானது. 2027 ODI WC-ன் போது கோலிக்கு 39, ரோகித்துக்கு 40 வயதாகியிருக்கும் என்பதால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலை BCCI மறுத்துள்ளது. ஓய்வு தொடர்பாக ஏதேனும் ஐடியா இருந்திருந்தால் அவர்களே தெரிவித்து இருப்பார்கள் என BCCI மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 11, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 11 – ஆடி 26 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை.

News August 11, 2025

இன்று வங்கிக் கணக்கில் பயிர்க் காப்பீட்டு தொகை

image

PM ஃபசல் பிமா திட்டத்தின் கீழ், பயிர்க் காப்பீடு தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இன்று டெபாசிட் செய்யப்படும். இதற்காக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ₹3,200 கோடி தொகையை விடுவிக்கிறார். நாடு முழுவதும் 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் இத்திட்டத்தில், அதிகபட்சமாக ம.பி.,க்கு ₹1,156 கோடி, ராஜஸ்தானுக்கு ₹1,121 கோடி, சத்தீஸ்கருக்கு ₹150 கோடி, இதர மாநிலங்களுக்கு ₹773 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!