News April 27, 2024
கரூர்: குப்பை மேட்டில் பச்சிளம் குழந்தை சடலம்

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே காவல்காரன்பட்டி ஆதிதிராவிடர் காலனி சமுதாயக்கூடம் எதிரே உள்ள குப்பை மேட்டில், பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்த வடசேரி விஏஓ கணேசன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று(ஏப்.26) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 7, 2025
கரூரில் 3 பேர் அதிரடி கைது!

கரூர் மாவட்டம், குளித்தலை சிந்தாமணிப்பட்டி பகுதியில் வெளியூர் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தது தொடர்பாக மைலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மைதின் (48), கமருதீன் (58), மற்றும் குருணிக்குளத்துப்பட்டியைச் சேர்ந்த முஜீப் ரகுமான் (50) ஆகிய மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அசாம் மாநில லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 7, 2025
வாலாந்தூரில் வீட்டில் மது விற்றவர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வாலாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை மகன் செந்தில்குமார் 52. இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற செந்தில்குமார் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.
News November 7, 2025
கரூர்: புகழூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

கரூர் மாவட்டம் புகழூரில் 9 நவம்பர் 2025 ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை TNPL மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் கண் குறைபாடு, பார்வை பிரச்சனை, கண் வலி பரிசோதனை, மருந்துகள் மற்றும் தேவையான கண்ணாடிகள் வழங்கப்படும் .பொதுமக்கள் அனைவரும் இலவசமாக இம்முகாமில் பங்கேற்று மருத்துவ சேவைகளில் நன்மை பெறலாம்


