News April 27, 2024
கண் நோய் தீர்க்கும் வீரபாண்டி கெளமாரியம்மன்

தேனி வீரபாண்டியில் அமைந்துள்ளது கெளமாரியம்மன் கோயில். மதுரையை முன்பு ஆண்ட வீரபாண்டியனுக்கு பார்வை பறிபோன நேரத்தில், தற்போது கோயில் உள்ள இடத்தில் எழுந்தருளிய கெளமாரியம்மனுக்கு வழிபாடு நடத்தி, பார்வை பெற்றார் என்பது வரலாறு. இதனால் அங்கு அவர் கோயில் கட்டினார். எனவே அவரது பெயரால் அந்த ஊர், வீரபாண்டி என அழைக்கப்படுகிறது. இங்கு வழிபட்டால், கண் நோய் தீரும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
Similar News
News March 11, 2026
தமிழக தேர்தல் தேதி.. ECI சொன்ன புதிய தகவல்

அடுத்த 3 முதல் 5 நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக ECI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. TN, கேரளா, புதுவையில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 3 -4 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 2 கட்டங்களாகவும் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.
News March 11, 2026
IPL-ல் ஆரம்பமே அமர்க்களமா இருக்கும் போலயே!

IPL போட்டிகள் மார்ச் 28-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்தியா முழுவதும் IPL Fever தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரசிகர்களை மேலும் ஹைப் ஏற்றும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது IPL முதல் போட்டியிலேயே RCB-ம் CSK-ம் மோதவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை(மார்ச் 12) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 11, 2026
பச்சைத் துரோகம் செய்த இபிஎஸ்: ஐ.பெரியசாமி

மோடி அரசின் செயல்பாடு 100 நாள் வேலை திட்டத்தையே முற்றிலும் ஒழித்துக்கட்டும் முடிவில் இருப்பதையே காட்டுவதாக ஐ.பெரியசாமி விமர்சித்துள்ளார். கிராமப்புற மக்களின் வயிற்றில் அடிக்கும் புதிய சட்டத்தை ஆதரித்து EPS பச்சைத் துரோகம் செய்துவிட்டார் என சாடிய அவர், கிராமபுறத்தின் முதுகெலும்பை முறிக்கும் மோடி அரசின் வஞ்சகத்துக்கு துணைபோன EPS-க்கு மக்கள் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்தார்.


