News April 27, 2024
உணவில் உப்பு அதிகமானால்…

*உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும் *உயர் இரத்த அழுத்தத்துக்கு (BP) அதிகமான உப்பு முதன்மை காரணம் *உப்பு அதிகமானால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், இதனால் நோய்கள் அதிகரிக்கும் *குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது *ஒருவருக்கு ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 5 கிராம் உப்பு போதுமானது *அதேநேரம் உடலுக்கு குறைந்த அளவு உப்பு தேவை.
Similar News
News March 16, 2026
கடன் தள்ளுபடி.. அரசு வெளியிட்ட தகவல்

கடந்த 11 ஆண்டுகளில் ₹9.75 கோடி வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அதிகபட்சமாக 2020 நிதியாண்டில் ₹1.59 லட்சம் கோடியும், குறைந்தபட்சமாக 2025 நிதியாண்டில் ₹47,568 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டது என்றார். 2025 நிதியாண்டு முதல் வாராக்கடன் தள்ளுபடி தொகை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News March 16, 2026
பெண்ணை கடித்து குதறிய நாய்கள்.. போலீசார் அதிர்ச்சி

புனேவில் பெண் ஒருவர் இறப்பு தொடர்பாக வெளியான CCTV போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டபோது, முதலில் கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆனால் CCTV-ல் பதிவாகியிருந்த காட்சிகள் அவர்களை. அதிகாலையில் நடந்துசென்ற பெண்ணை சூழ்ந்த நாய்கள் சரமாரியாக கடித்து குதறியதும், அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
News March 16, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு ஏப்.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது. விடுமுறையை ஈடுசெய்ய ஒரு குறிப்பிட்ட நாளில் வேலை நாளாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கும் விரைவில் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. SHARE IT


