News December 1, 2025

விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரண தொகை

image

தென்காசி மாவட்டம் , துரைச்சாமி புரத்தில் 24.11.25 அன்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் வாரிசுதாரர்களிடம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரண தொகையினை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் K.K.S.S.R. ராமச்சந்திரன் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 3, 2025

தென்காசி: சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்

image

கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் கடந்த 2019ல் மிட்டாய் வாங்க ரூ.10 தருவதாகக் கூறி பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழக்கு விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி நேற்று விசாரித்து சண்முகநாதனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News December 3, 2025

தோரணமலை முருகன் கோயிலில் நாளை கிரிவலம்

image

கடையம் அருகே அமைந்துள்ள தேரையர், சித்தர், அகத்தியர் வழிபட்ட தோரணமலை முருகன் கோயில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் நாளை காலை 6 மணி முதல் நடைபெறும். இந்த 6 கிலோ மீட்டர் சுற்றளவில் கிரிவலப்பாதையை வலம் வருவதற்கு சுமார் 1.15 மணி நேரம் ஆகும். அதனைத் தொடர்ந்து காலையும், மதியமும் அன்னதானம் நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க…

News December 2, 2025

குழந்தை தொழிலாளர் பணி – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

தென்காசி மாவட்டத்தில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டம், 1986-ன் படி 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்தவொரு பணியிலும், 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்தக் கூடாது. அவ்வாறு பணி அமர்த்திய வேலையளிப்பவருக்கு ரூ.50,000/- வரை அபராதமும், 6 மாதங்கள் முதல் 2 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!