News April 26, 2024
15 பந்துகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றுவார்

டி20 உலகக் கோப்பையில் முக்கிய வீரராக சூர்ய குமார் யாதவ் இருப்பார் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 15 பந்துகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் அவரிடம் இருப்பதாகக் கூறிய யுவராஜ், இந்திய அணி கோப்பையை வெல்ல அவர் முக்கியக் காரணமாக இருப்பார் என்றார். மேலும், விராட் மற்றும் ரோகித் மீது சிலர் விமர்சனங்களை வைத்தாலும் அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.
Similar News
News April 10, 2026
Spam Call-கள் எரிச்சலூட்டுதா? இந்த ட்ரிக்ஸ் போதும்!

கிரெடிட் கார்டு வேணுமா, லோன் வாங்கிக்குறீங்களா என அடுத்தடுத்து வரும் Spam call அழைப்புகள் உங்களை வெறுப்பேற்றினால், இதை பண்ணுங்க ➤போன் Settings -> Caller ID & Spam-க்கு செல்லுங்கள் ➤அதில், ‘Filter spam calls’-ஐ On செய்து வைத்து கொள்ளுங்கள். இது பொதுவாக அனைத்து போன்களிலும் இருக்கும் ➤அல்லது TRAI-க்கு ‘START 0’ என 1909 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யுங்கள் போதும். SHARE IT.
News April 10, 2026
அரசியல் கட்சியினரே வெயில் நேரத்தில் இதை செய்யுங்க

கோடை வெயில் கொளுத்தி வருவதால், தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் அரசியல் கட்சினருக்குதான் இந்த பதிவு. காலை 6 – மதியம் 12 மணி வரையும், மாலை 3 – இரவு 10 மணி வரையும் பரப்புரை செய்யுங்கள். காரமான & எண்ணெய் உணவுகளை தவிர்த்து, நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உட்கொள்ளவும். பரப்புரையின்போது தொப்பி மற்றும் வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணியவும். அதிகப்படியான தண்ணீர், இளநீர், மோர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும்.
News April 10, 2026
விஜய்யால் உதயநிதியின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு

கடலூரில் பிரசாரம் செய்ய நாளை விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டதால், உதயநிதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாளை கடலூரில் பிரசாரம் செய்ய உதயநிதியும் திட்டமிட்டிருந்த நிலையில், தவெக தரப்பு முன்பே விண்ணப்பித்ததால், விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, கடலூரில் உதயநிதியின் பிரசாரம் வேறொரு நாளுக்கு மாற்றப்படவுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


