News December 1, 2025
விழுப்புரம்:இளைஞரை தாக்கிய பெண் மீது வழக்கு!

திண்டிவனம் அருகே செண்டூர், அம்பேத்கர் மணிபாலன் என்பவர் வசித்து வருகின்றார்.அப்பாவு நகர் பகுதியில் சிவக்குமார் மனைவி ராதிகா இவருக்கு மணிபாலன் பணத்தை கடனாக கொடுத்துள்ளார்.பின்னர், பணத்தை திருப்பி கேட்டபோது ஆத்திரம் அடைந்த ராதிகா தகாத வார்த்தைகளால் மணிபாலனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மணிபாலன் புகாரளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News December 3, 2025
விழுப்புரம்: தந்தை கண்டித்ததால் மாணவன் விபரீத முடிவு!

விழுப்புரம்: மரூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் தினேஷ் குமார் (18) திண்டிவனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். தினேஷ்குமார் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் ஏழுமலை, தனது மகன் தினேஷ்குமாரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த தினேஷ்குமார் வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரிய தச்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 3, 2025
BREAKING: விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

‘டிட்வா’ புயல் எதிரொலியாக இன்று (டிச.3) விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக விழுப்புரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. உங்க எரியா மழை நிலவரம் குறித்து கமெண்ட் பண்ணுங்க!
News December 2, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


