News April 26, 2024
19 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீசும்

தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்பட 19 மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் பகல் 12-3 மணி வரை தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News January 29, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 29, தை 15 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 12:45 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: ஏகாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News January 29, 2026
ராகுல் – கனிமொழி சந்திப்புக்கு காரணம் இவரா?

சமீபத்தில், திமுக இதுவரை தங்களுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவே இல்லை என TN காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது அடாவடி அணுகுமுறை காரணமாகவே யாரும் பேச வேண்டாம் என ஸ்டாலின் கட்சிக்குள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும், இனி தொகுதி பங்கீடு குறித்து நேரில் பேசிவிடலாம் என்ற முடிவின்படியே, ராகுல் – கனிமொழி பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம்.
News January 29, 2026
சென்சார் விதிகளை பின்பற்ற வேண்டும்: சவுந்தர்யா ரஜினி

தணிக்கை வாரியம் இன்றோ, நேற்றோ புதிதாக உதயமான அமைப்பல்ல. அது மதிக்கப்பட வேண்டும் என சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும்,ரசிகர்களுக்கு எந்த மாதிரியான படங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை அந்த தணிக்கை வாரியமே முடிவு செய்கிறது என்றும், இந்தியாவில் சினிமா படங்கள் சென்சார் வாரியத்தின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது நீண்டகாலமாக தொடர்ந்து வரும் வழக்கம் எனவும் பேசியுள்ளார்.


