News April 26, 2024

19 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீசும்

image

தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்பட 19 மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் பகல் 12-3 மணி வரை தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News January 25, 2026

விஜய்யுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் இணைந்தார்

image

அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், சற்றுமுன் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக இரண்டாக பிளவுபட்ட பிறகு, OPS-ன் தீவிர ஆதரவாளராக இருந்தவர் இவர். சமீபகாலமாக OPS அணியினர் அடுத்தடுத்து வெளியேறி மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் இன்று விஜய் முன்னிலையில் கு.ப.கிருஷ்ணன் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். 1991 – 1996 வரை விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர்.

News January 25, 2026

பத்மஸ்ரீ விருதுகள் பெறும் தமிழர்கள்!

image

2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த கால்நடை ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஓதுவார் திருத்தணி சாமிநாதன், நீலகிரியைச் சேர்ந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணா, வெண்கல சிற்பக் கலைஞர் கலியப்ப கவுண்டர், திருவாரூர் பக்தவச்சலம் உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.

News January 25, 2026

விஜய்யின் இன்றைய குட்டி ஸ்டோரி இதுதான்

image

சொந்த நாட்டிலே நெருக்கடியின்போது, மறைந்து வாழ்ந்து வந்தார் ஒருவர். பின்னர், தனது நட்புறவுடன் பேசி பெரும் படையை திரட்டி நாட்டையே மீட்டெடுத்தார் அவர். அவர்தான் நம் (தவெக) கொள்கைத் தலைவர் வேலுநாச்சியார். இந்த போரின்போது நட்பு சக்தியாக இருந்த மருது சகோதரர்கள் போல் நீங்கள் (தொண்டர்கள்) ஒற்றுமையுடன் செயல்பட்டு, ஊழல்படிந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என ரியல் கதையை கூறினார் விஜய்.

error: Content is protected !!