News April 26, 2024
பணியில் இருந்து ஓய்வு பெற விருப்பமா?

தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு ஓய்வூதியம் என்பது கனவுதான். பெரும்பாலானவர்கள் பணத்தைச் சேமித்து வைத்து விரைவாக ஓய்வுபெற நினைக்கிறார்கள். அப்போது, எவ்வளவு தொகை இருந்தால் பணியில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற கேள்வி எழும். இதற்குப் பொருளாதார வல்லுநர்கள் 25X ஓய்வூதிய விதியைப் பயன்படுத்தக் கூறுகிறார்கள். அதாவது, ஆண்டுச் செலவில் 25 மடங்குத் தொகை கையில் இருந்தால் நீங்கள் ஓய்வு பெறலாம்.
Similar News
News August 25, 2025
ராசி பலன்கள் (25.08.2025)

➤ மேஷம் – சோர்வு ➤ ரிஷபம் – செலவு ➤ மிதுனம் – சாதனை ➤ கடகம் – அமைதி ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – மகிழ்ச்சி ➤ துலாம் – வரவு ➤ விருச்சிகம் – தடங்கல் ➤ தனுசு – நலம் ➤ மகரம் – களிப்பு ➤ கும்பம் – சுகம் ➤ மீனம் – மேன்மை.
News August 24, 2025
குட்டி தளபதி பட்டம்… SK மறுப்பு

தன்னை குட்டி தளபதி என்று அழைப்பதை சிவகார்த்திகேயன் மறுத்துள்ளார். ‘மதராஸி’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் ‘கோட்’ படத்தின் துப்பாக்கி பகிரும் காட்சியில் விஜய் சார் எனக்கு ஊக்கமளிப்பதாக உணர்ந்தேன். படம் வெளியான பிறகு பலரும் என்னை குட்டி தளபதி, திடீர் தளபதி என்றெல்லாம் அழைத்தனர். இதை நான் ஏற்கவில்லை. அண்ணன் அண்ணன் தான், தம்பி என்றுமே தம்பி தான் என சிவகார்த்திகேயன் பேச அரங்கம் அதிர்ந்தது.
News August 24, 2025
ஒரு முறை வந்த ஃப்ளூ காய்ச்சல் 6 மாதங்களுக்கு மீண்டும் வராது!

மழைக்காலம் என்பதால் பல இடங்களில் ஃப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த அக்டோபரில் பரவத் தொடங்கிய ஃப்ளூ பாதிப்பு, இந்தாண்டு மார்ச் வரையிலும் நீடித்தது. ஒரு முறை வந்த ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு வராது எனக் கூறும் டாக்டர்கள், அதன்பின் அதனுடைய மரபணு முழுமையாக மாற்றம் அடைவதால் மீண்டும் வரலாம் என்கின்றனர். அதனால் ஆண்டுதோறும் தடுப்பூசி அவசியம் என வலியுறுத்துகின்றனர். ஜாக்கிரதை மக்களே!