News December 1, 2025

வேலூர்: போதை மாத்திரைகளை விற்ற 5 பேர் கைது!

image

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வடக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு போதை மாத்திரைகளை விற்க முயன்ற சந்துரு (24), லோகேஷ் (22), விக்னேஷ் (24), சூர்யா (36), தினேஷ் (31) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகள் 40 ஊசிகள் பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 3, 2025

வேலூர் ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

image

வேலூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் மாபெரும் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை மேளா வரும் 8ஆம் தேதி வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. மேலும், கூடுதல் விவரங்கள் மற்றும் உதவிக்கு 0416-2290348 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (டிச.2) தெரிவித்துள்ளார்.

News December 3, 2025

வேலூர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு

image

திருவண்ணாமலை மகா தீபத்திருநாளையொட்டி திருவண்ணாமலை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க (டிச.2) முதல் (டிச.5) வரை பெங்களூரு, கிருஷ்ணகிரி மற்றும் சித்தூரிலிருந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரி நோக்கிச் செல்லும் கனரக, இலகு ரகவாகனங்கள் அனைத்தும் வேலூர், கண்ணமங்கலம், திருவண்ணாமலை வழியாக செல்ல தடை விதிக்கப்படுகிறது. மாறாக அனைத்து வாகனங்களும் வேலூர் ஆற்காடு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 3, 2025

வேலூர்: மின்வேலியால் தந்தை, மகன்கள் பலியான பரிதாபம்!

image

வேலூர்: ஒடுகத்தூர், ராமாநாயணிகுப்பம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு (டிச.1) வயலுக்கு வைத்திருந்த வேலியால் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் 2 மகன்கள் ஜானகிராமன் (55), விக்காஸ் (25), ஜீவா (22) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் வயலுக்கு மின்வேலி அமைத்த அதே பகுதியை சேர்ந்த சங்கரை (52) இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!