News December 1, 2025
வேலூர்: 2வது முறை.. பிணமாக கிடந்த காட்டுயானை – அதிர்ச்சி!

பேரணாம்பட்டு அடுகே வனப்பகுதியில் ஆண் யானை மர்மமான முறையில் இறந்துள்ளது. கடந்த (அக்) மாதம் பாஸ்மார்பெண்டா வனப்பகுதியில் 3 வயது பெண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அது குறித்த விசாரணையும் நடந்து வரும் நிலையில், அடுத்த சம்பவமாக மீண்டும் ஒரு ஆண் யானை ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வனத்துறையினர் தீவிர ரோந்தில் ஈடுபட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
வேலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000 வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News December 1, 2025
வேலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்…!

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு இங்கே <
News December 1, 2025
வேலூர்: போதை மாத்திரைகளை விற்ற 5 பேர் கைது!

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வடக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு போதை மாத்திரைகளை விற்க முயன்ற சந்துரு (24), லோகேஷ் (22), விக்னேஷ் (24), சூர்யா (36), தினேஷ் (31) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகள் 40 ஊசிகள் பறிமுதல் செய்தனர்.


