News December 1, 2025
பெரம்பலூர்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் அழைத்து சென்று மீண்டும் வரும் பொழுது அவர் தப்பியோடினார். இதனால் கைதியை கவனக்குறைவாக அழைத்துச் சென்ற சூரியகுமார், பிரேமா ஆகிய இரண்டு காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 1, 2025
பெரம்பலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
பெரம்பலூர்: வசமாக சிக்கிய தப்பி ஓடிய போக்சோ கைதி!

பெரம்பலூர் மாவட்டம் ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவர், போக்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், சிறையில் அடைப்பதற்காக அழைத்து சென்ற பொழுது தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து வாஞ்சிநாதன், கேரள மாநிலம் சபரிமலையில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் பெரம்பலூர் காவல் துறையினர் வாஞ்சிநாதனை சபரிமலையில் கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்தனர்.
News December 1, 2025
பெரம்பலூர்: SIR பணிகள் தீவிரம்!

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 98 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. பெரம்பலூா் (ம) குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5,90,490 வாக்காளா்கள் உள்ளனர்.


