News April 26, 2024
தென்காசி: கோடை கால சிறப்பு முகாம்

தென்காசி,ஐந்தருவி அருகே உள்ள சூழல் பூங்காவில் இன்று தமிழ்நாடு வனத்துறை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணைந்து நடத்திய கோடைகால இயற்கை பாதுகாப்பு முகாமில் கலந்து கொண்டு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் பரிசுகளையும், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.இதில் மாணவ, மாணவிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Similar News
News March 10, 2026
தென்காசி: குறைந்த விலையில் கார் பைக் வேண்டுமா.? ரெடியா இருங்க..

புளியங்குடி உட்கோட்ட காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 197 இருசக்கர வாகனங்களும், 3 மூன்று சக்கர வாகனங்களும் 2 நான்கு சக்கர வாகனங்களும், சேர்ந்து மொத்தம் 202 மோட்டார் வாகனங்கள் பொது ஏலம் வரும் 23.03.2026 ம் தேதி காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை சொக்கம்பட்டி காவல்நிலைய வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
News March 10, 2026
தென்காசி: டூவீலர் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே 2 பைக்குகள் மோதிக் கொண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பிரவீன், ரஞ்சித் ஆகியோர் பைக்கில் ஆலங்குளம் – அம்பாசமுத்திரம் சாலையைக் கடக்க முயன்றபோது, ஜெகதீசன் ஓட்டிவந்த பைக் இவர்கள் மீது மோதியது. இதில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
News March 10, 2026
தென்காசி: அரசு பஸ்சில் பயணியிடம் ரூ.25,000 அபேஸ்

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (58). இவர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேருந்து நிலையத்திலிருந்து நெல்லைக்கு செல்ல அரசு பேருந்தில் எறியுள்ளார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கால்சட்டையின் பை பிளேடால் அறுக்கப்பட்டு, ரூ.25 ஆயிரம் பணத்தை மர்மநபர் திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


